Saturday, April 27, 2024

மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் – தீக்குளித்த தாய் உயிரிழப்பு!!

Must Read

நெல்லை மாவட்டத்தில் தனது இரு மகன்களையும் போலீசார் காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்றதால் போலீசாரின் முன்னிலையிலேயே அவர்களது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகன்கள் மீது புகார்:

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சாதியநகர் பகுதியினை சேர்ந்தவர் சகுந்தலா. அவருக்கு பிரஷாந்த், பிரதீப் என்று இரு மகன்கள் உள்ளனர். அவரகள் இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். சகுந்தலாவின் கணவர் தர்மராஜ், தனது கணவரை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார், சகுந்தலா. கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மகன் பிரதீப் மீது எதிர் வீட்டினை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பிரதீப் பொது முடக்கத்தின் போது எதிர் வீட்டில் உள்ள பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் இதன் காரணமாக புகார் அளிக்கப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் அவரை போலீசார் போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இப்படியாக இருக்க, போலீசார் நேற்று அவரது மகனை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை முதலில் சகுந்தலா எதிர்த்துள்ளார். ஆனால், போலீசார் பிரதீப் குடும்பத்தினரிடம் எந்த காரணமும் கூறாமல் அழைத்து சென்றுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இன்று அதிகாலை அவரது அண்ணனான பிரஷாந்தையும் விசாரணை என்று கூறி அழைத்து சென்றுள்ளனர். இதனை சகுந்தலா தட்டி கேட்டுள்ளார். ஆனால், போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சகுந்தலா போலீசார் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். போலீசார் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் போதே அவர் உயிர் பிரிந்து விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -