Thursday, May 9, 2024

‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவின் 34 ஆவது பிறந்தநாள் – 34 பள்ளிகளுக்கு உதவி!!

Must Read

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா வரும் 27ஆம் தேதி தன்னுடைய 34 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி பகுதிகளில் உள்ள 34 அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை சுகாதார வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

சுரேஷ் ரெய்னா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் என்ற சிறுநகரை சேர்ந்தவர். இவர் நவம்பர் 27 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல் இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஆடவில்லை. இவருக்கு வயது 34 ஆகபோகும் நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரில் உள்ள 34 அரசு பள்ளிகளுக்கு அடிப்படை சுகாதார வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரெய்னா இந்த நலத்திட்ட உதவியைத் தன்னுடைய ‘கிரேசியா ரெய்னா’ அறக்கட்டளை மூலம் வழங்கவிருக்கிறார். இது குறித்தான ரெய்னா பதிவில், என்னுடைய 34 ஆவது பிறந்தநாளை, இவ்வகையில் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது சிறந்த தொடக்கம். எதிர்வரும் காலங்களில் நிறைய பள்ளிகளை மேம்படுத்த எதிர்பார்த்து இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு உள்ளார். ”யுவா அன்ஸ்டாப்பபிள்” என்ற இயக்கத்துடன் சேர்ந்து அடுத்த ஆண்டு முழுக்க இந்த நலத் திட்ட உதவிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் ரைட்ஏஜ் என்ற மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்த அவர் முடிவு செய்துள்ளார் மற்றும் ஸ்மார்ட் பள்ளி அறைகளையும் ஏற்படுத்தித் தர உள்ளார் ரெய்னா. பிரதமரின் சுவச் பாரத் திட்டத்தின் தூதுவராக இருக்கும் ரெய்னா அந்த பள்ளிகளில் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதியை செய்து தர உள்ளார். அவர் பள்ளிகளுக்கு உதவ உள்ளதை பலரும் பாராட்டி உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -