Thursday, May 2, 2024

கற்களுக்கு இடையே சிக்கிய படகு – கடல்சீற்றத்திலிருந்து தப்பிய மீனவர்கள்..!!

Must Read

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டினம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் படகு கற்களுக்கு இடையே சிக்கியது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர்த் தப்பினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கடல் சீற்றம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு கடற்கரைப் பகுதியான அரபிகடல் பகுதியில், கடந்த சில நாட்களாக கடல், சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் தேங்காய்பட்டினம் கடற்கரை சாலைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.

boat stucked
boat stucked
சிக்கிய ஃபைபர் படகு:

ஆக்ரோஷ கடல் அலைகளால், பொழி நுழை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கற்களுக்கு இடையே ஒரு படகு சிக்கியது.

boat stucked
boat stucked

இதையடுத்து சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு நான்கு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி கரை சேர்ந்தனர்.

மீனவர்கள் கோரிக்கை:

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன,இதுபோல் இனி நடக்காமல் இருக்க நுழைவாயிலில் உள்ள மணலை அகற்றிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -