கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டினம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் படகு கற்களுக்கு இடையே சிக்கியது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர்த் தப்பினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
கடல் சீற்றம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு கடற்கரைப் பகுதியான அரபிகடல் பகுதியில், கடந்த சில நாட்களாக கடல், சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் தேங்காய்பட்டினம் கடற்கரை சாலைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.
சிக்கிய ஃபைபர் படகு:
ஆக்ரோஷ கடல் அலைகளால், பொழி நுழை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கற்களுக்கு இடையே ஒரு படகு சிக்கியது.
இதையடுத்து சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு நான்கு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி கரை சேர்ந்தனர்.
மீனவர்கள் கோரிக்கை:
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன,இதுபோல் இனி நடக்காமல் இருக்க நுழைவாயிலில் உள்ள மணலை அகற்றிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.