கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

0
Narayanasamy V
Narayanasamy V

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிர் இறப்பவர்களின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார்.

கொரோனா நிவாரணம்:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 2,300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 1,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு தான் என்றாலும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே மாநில பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருந்தார் முதல்வர் நாராயணசாமி.

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!

Puducherry
Puducherry

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிர் இறப்பவர்களின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என நாராயணசாமி அறிவித்து உள்ளார். அங்கு இதுவரை 9.16 கோடி ரூபாய் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சேர்ந்து உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here