பருவநிலை மாற்றம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தலைநகர் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம்:
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சில தினங்களாகவே இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இன்று நள்ளிரவு முதல் பல இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி தீர்க்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நந்தனம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் பரவலான மழையும், ஒரு சில இடங்களான மெரினா கடற்கரை, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய இடங்களில் ஏற்படும் வளிமண்டல சுழற்சியால் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்யும்:
தமிழகம் மற்றும் கேரளாவிலும் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு எனவும், இவை வடகிழக்கு பருவமழை வலுவடைவதன் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தொடர்ந்து நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்திலும் , நவம்பர் 6 ஆம் தேதி கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்பு எனவும் அறிவித்துள்ளது. நாட்டின் மற்ற பகுதியில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளனர்.