விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 இல் 2 நாட்களாக பல சண்டைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்கில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்யுக்தா மற்றும் அரி இடையே சண்டை வலுக்கிறது.
பிக் பாஸ்
நேற்றைய பிக் நிகழ்ச்சியில் கோர்ட்டில் வழக்கு தொடருவது போல டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் முதலில் சனம் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரின் பெயரும் இருந்தது. சனம் அவர்களுக்கு பாலாஜி ரம்யா பாண்டியன், அனிதா உறுதுணையாக பேசினர். சுரேஷ் அவ்ரகளுக்கு ஷிவானி, அர்ச்சனா மற்றும் ரியோ ஆதரவளித்தனர். இதற்கிடையே இவர்களுக்கும் சண்டை வலுத்தது என்றே சொல்லலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் நேற்று வெளியிட்ட முதல் ப்ரோமோவை விஜய் டிவி டெலீட் செய்தது அதற்கான காரணங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சம்யுக்தா மற்றும் ஆரி எதிர் எதிரே நிற்கின்றனர். ஆரி எல்லா விசயத்திலும் தேவையே இல்லாமல் பேசுகிறார் என்று கூற கோவமடைகின்றனர்.
இங்கு குரூப்பிஸம் கண்டிப்பாக நடந்து வருகிறது என்றும் தலைவர் என்ற பொறுப்பை உணராமல் சம்யுக்தா இருப்பதாகவும் ஆரி கூறினார். இதனிடையே பாலாஜி எதோ முணுமுணுக்கிறார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் இடையே பெரிய சண்டையே ஏற்படுகிறது. சில நாட்களாக பாலாஜியை மகன் என்று சொல்லிக்கொண்டிருந்த அர்ச்சனா உடன் கூட பாலாஜி சண்டையிட்டுள்ளார்.
பலரும் தற்போது ஆரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆரி தான் ஜெயிக்க போவதாகவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். பாலாஜி தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் நிலை தான் ஏற்படும். மேலும் இந்த வாரத்தில் அர்ச்சனா வெளியேற போவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.