உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியப் பொருளாதாரம் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
அனைத்து பொருளாதாரமும் வீழ்ச்சி..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வர்த்தகம், தொழில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், போக்குவரத்து, சிறு, பெருநிறுவன செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. அத்தியாவசியம் தவிர ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு..!
இந்தியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் 5% வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் 2021 ம் நிதியாண்டில் அது 2.8% ஆக வீழ்ச்சி அடையும் எனவும் கணித்திருந்தது.
உலக வங்கி எச்சரிக்கை..!
இந்தியா ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்னும் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி எச்சரித்துள்ளது மற்றும் ஊரடங்கு உத்தரவால் இன்னும் பொருளாதாரம் பின்னோக்கி செல்லும் என்றும் கணித்துள்ளது.
44 ஆயிரத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை – கொரோனவால் கிடுகிடு உயர்வு..!
வாழ்வாதாரம் பாதிப்பு..!
பல லட்சம் முறைசாரா பல தொழிலாளர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.தெற்கு ஆசியா மோசமான பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. கொரோனாவினால் சுற்றுலா மற்றும் போக்குவரத்தும் விருந்தோம்பல் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் தவிர இதர விநியோக சங்கிலிகள் தடைப்பட்டுள்ளன. மேலும் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆக பணப்புழக்கம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. ஆக நிச்சயம் வீழ்ச்சி மிகவும் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் சில அறிக்கைகள் கூறியுள்ளன.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்..!
அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக தற்காலிகமாக அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், குறிப்பாக உள்ளூர் மட்டத்தில் அதிகளவிலான வேலைகளை உருவாக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |