கொரோனாவால் அடிமட்டத்திற்கு சென்ற தொழில்துறை – இந்த நேரத்தில் எதில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம்..?

0

உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த நிலையில் லாபம் கொடுக்கும் சிறந்த முதலீடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பாதுகாப்பான முதலீடுகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

கோல்டு இடிஎஃப் – சிறந்த லாபம்..!

கடந்த ஆண்டு Gold ETFs 18.4% லாபத்தினைக் கொடுத்துள்ளது. கடந்த மார்ச் வரையில் 7% லாபம் கொடுத்துள்ளது. அதிலும் கடந்த 2010 முதல் இது சிறப்பான லாபத்தினை கொடுத்து வருகிறது. இது தங்கத்துடன் நேரடி தொடர்புடன் உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பயன்படுகிறது.

பாரத் பாண்ட் இ.டி.எஃப்..!

மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் பாண்டுகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் தான் இந்த பாரத் பாண்ட் இ.டி.எஃப். இதன் முதிரிவு காலம் முதிர்வு காலம் மூன்று மற்றும் 10 ஆண்டுகள் ஆகும். இதில் குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். இந்த பத்திரங்கள் வரி இல்லா பத்திரங்களை விட சிறந்த முதலீடுகளாக கூறப்படுகின்றன.

அரசு பத்திரங்கள்..!

சில்லறை முதலீட்டாளர்கள் பாதுகாப்பாகவும் வேகமாகவும் லாபத்தினை ஈட்ட இது சிறந்த வழியாகும். மேலும் நீண்ட காலத்தில் அரசு பத்திர திட்டங்கள் நல்ல லாபத்தினை அளிக்கும். இதனையும் நாம் தேசிய பங்கு சந்தை மூலம் பெற முடியும்.

எது சிறந்தது..?

பிசிகல் கோல்டுடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவும். ஏனெனில் கோல்டு இடிஎஃப் மின்னணு வடிவில் நம்மிடம் இருக்கும். பிசிகல் தங்கத்தினை விட கோல்டு இடிஎஃப் சிறந்தது. ஏனெனில் இது என்எஸ்இ சந்தையில் புழங்குவதால், சந்தையில் வாங்கலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here