தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் நாமக்கல், தேனி, திருச்சி, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், கரூர், மதுரை, நீலகிரி மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர் பகுதிகளில் மிதமாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு:
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக உசிலம்பட்டி பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா??
தேவலா, குப்பனம்பட்டி பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை, ஒகேனக்கல் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக குளித்தலை, மேட்டுப்பட்டி ஈரோடு, கொடைக்கானல் பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்மேற்கு அரபி கடலில் பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் வரும் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபி கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.