சினிமா துறையில் ஒரு நடிகர், நடிகையை வைத்து கிசுகிசுக்கள் வெளிவருவது சகஜமான ஒன்று தான். அதுவும் 2 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்து விட்டால் அவர்களை சேர்த்து வைத்து பேசிவிடுவார்கள். அந்த வகையில் விஷால், லட்சுமி மேனன் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகின. அதனை பற்றி லட்சுமி மேனன் விளக்கமளித்துள்ளார்.
லட்சுமி மேனன்:
தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். தனது முதல் படத்திலேயே மிகவும் பிரபலமடைந்தார். அதற்கடுத்து சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டே இருந்தது. கும்கி படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்களுக்கு அடுத்து அவர் பாண்டிய நாடு படத்தின் மூலம் விஷாலுடன் ஜோடியாக இணைந்தார். பிறகு நான் சிகப்பு மனிதன் படத்திலும் ஜோடி சேர்ந்தனர். அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்ததால் இவர்களை பற்றி கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் எந்த படத்திலும் ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காத லட்சுமி மேனன் விஷாலுடன் முத்த காட்சிகளில் நடித்திருந்தார்.
இப்பொழுது அவர் தமிழ் சினிமாவை விட்டு விலகி படிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் விஷால் தான் என அனைவரும் விமர்சித்து வந்தனர். தற்போது லட்சுமி மேனனே இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘நான் விஷாலுடன் மெசேஜில் தான் பேசுவேன். அவரை தவிர வேறு யாருடனும் பேச மாட்டேன். நான் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டது உண்மை தான். சிறிது காலம் நானாக தான் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன்.’ என்று கூறியுள்ளார். மேலும் விஷாலின் திருமணத்தை பற்றி கேட்டபோது நான் இல்லாமல் விஷாலுக்கு திருமணமா?? என்று கூறியுள்ளார்.