வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை திருமயம் பகுதியில் 10 செமீ மழையும், குறைந்தபட்சமாக ஊட்டியில் 3 செமீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையில் இன்று இரவு 11.30 மணிவரை 1.8 முதல் 2.8 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு உள்ளது.