கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

0

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில் மிகவும் சிரமமாகி விடுகிறது. இந்த கடன் பிரச்னையை சில பரிகாரங்கள் செய்வது மூலம் தீர்க்கலாம்.

கடன் தொல்லை தீர??

கடன் பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது தான். ஆனால் அது பெரிய அளவில் ஆகும்போது தான் பிரச்சனை வெடிக்கிறது. வட்டி மேல் வட்டி கட்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கிறோம்.

car loan
loan

சிலர் ஆடம்பர தேவைக்கு வாங்கி செலவு செய்துவிட்டு பிறகு கஷ்டப்படுகின்றனர். சிலரோ அவசர தேவை என்று வாங்கி விடுகின்றனர். இந்த கடன்களை அடைக்க மாதம் முழுவதும் வட்டி கட்டி பணத்தை வீணாக்குகிறோம். இந்த பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபட சில எளிய பரிகாரங்கள் உள்ளன.

பரிகாரங்கள்

இந்த பரிகாரங்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெற்றிலை, மொச்சை பயிறு, 1 ரூபாய் நாணயம், தாமரை பூ போதுமானது. கடன் பிரச்சனைகளை தீர்க்க சுக்கிர பகவானை வழிபடுதல் வேண்டும். அதாவது வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால் கடன் பிரச்சனை அகலும். வெள்ளிக் கிழமை காலை அல்லது மாலை வேளைகளில் அருகில் உள்ள நவகிரகங்கள் சன்னதிக்கு சென்று சுக்கிர பகவானுக்கு வெற்றிலை, பழம், 1 ரூபாய் நாணயம், ஒரு கைப்பிடி மொச்சை வைத்து உங்கள் பெயரை சொல்லி கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள்.

சுக்கிரன்
சுக்கிரன்

இவ்வாறு தொடர்ந்து 6 வாரங்கள் செய்ய வேண்டும். 6 வரன்கள் முடிவடைந்ததும், 1 ரூபாய் நாணயங்கள் 6 இருக்கும். அதனை வட்டி காசுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். மேலும் அந்த மொச்சை பயிரை உப்பு சேர்க்காமல் வேக வைத்து அதில் வெல்லம் கலந்து வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து நெய்வேதியமாக வைத்து வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம். இதனால் கடன் பிரச்சனை அகலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here