காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

0

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சித்ரா தனது வருங்கால கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

சித்ரா:

சித்ரா ஆரம்பத்தில் பல சேனல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார். மேலும் தொகுப்பாளினியாகவும் இருந்தார். பல விதமான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த சித்ரா தனது கடின உழைப்பால் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.

chithra
chithra

முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மூலமே அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சோர்ந்து போகாமல் உழைத்தார். அதற்கான பலனாகவே பாண்டியன் ஸ்டோர்ஸில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

chithra
chithra

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த சீரியலில் எதிர்பாராத விதமாக கதிரை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

chithra
chithra

திருமணத்திற்கு பிறகு எலியும் பூனையுமாக அடித்துக் கொள்ளும் முல்லை, கதிர் ஜோடி தற்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தற்போது காதலிக்கும் காட்சிகள் நடந்து வருகிறது. இப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது.

vj-chitra
vj-chitra

லாக்டவுன் சமயத்தில் சித்ராவிற்கும் பிரபல தொழிலதிபருக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது தனது வருங்கால கணவருடனான பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here