அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர் பருவநிலை மாற்றம்:
கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வறண்ட நிலையில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வரும் ஆகஸ்ட் 15 தேதி வரை வானிலை மையம் சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கடல் அலைகள் பொங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.