கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் திரை பிரபலங்கள் புதிது புதிதாக ஒன்றை செய்து அதனை மற்ற நடிகர்களும் செய்ய சவால் விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு வழங்கிய சவாலை ஏற்ற தளபதி விஜய் அதனை செய்து காட்டி உள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
மரக்கன்று நடும் விஜய்:
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளின் போது, தெலுங்கானா எம்.பி சந்தோஷ் குமார் தொடங்கி வைத்த மரக்கன்று நடும் “க்ரீன் இந்தியா சேலஞ்ச்” ஏற்றுக்கொண்டு தனது வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டு அதனை ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் நீங்களும் இதைபோல் செய்ய வேண்டும் என தளபதி விஜய், நடிகை சுருதி ஹாசன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை டேக் செய்து இருந்தார்.
மரக்கன்று நடும் சேலஞ்சை தெலுங்கு பிரபலங்களான பிரபாஸ், நாகார்ஜூனா, ரஷ்மிகா மந்தனா, சமந்தா ஆகியோரும் ஏற்கனவே செய்து இருந்தனர். தற்போது மகேஷ் பாபு சேலஞ்சை ஏற்ற தளபதி விஜய் தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA
— Vijay (@actorvijay) August 11, 2020
அந்த பதிவில், இது உனக்காக மகேஷ் பாபு, நல்ல ஆரோக்கியம் மற்றும் பசுமையான இந்தியாவிற்காக என குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.