இனி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்யும் கனமழை:
கடந்த சிலநாட்களாக வளிமண்டல மேலடுக்கு காரணமாக பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு காரணம் என்று வானிலை மையம் தெரிவித்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
தற்போது வங்கக்கடலில் உண்டாகியுள்ள காற்றழுத்ததாழ்வால் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் தொடரந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக வானிலை மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
மீனவர்களுக்கும் எச்சரிக்கை:
காற்றழுத்தத்தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த நிலையாக மாறியுள்ளது, அதனால் தெற்கு கர்நாடகா, கேரளா பகுதிகளுக்கு அதி தீவிரமாக மழை பெய்ய உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை 30 கோடி நிதி – அறக்கட்டளை தகவல்!!
இதனால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை குறைந்தபட்சமாக , 30 டிகிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.