இந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி இடத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
அதிகபட்ச மழை:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வளிமண்டல மேலடுக்கு தான் காரணம். கூடுதலாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், கனமழை எல்லா இடங்களிலும் கொட்டி தீர்த்துள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
நீலகிரி மாவாட்டத்தில் உள்ள அவலாஞ்சி பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இங்கு எப்போதும் பருவமழை காலங்களில் மழை அதிகமாக பெய்யும். இந்த ஆண்டு மிகவும் அதிகமாக மழை பெய்துள்ளது. புதன் கிழமை காலை 7 மணி முதல் வியாழன் காலை 7 மணி வரை இங்கு 58 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ரெட் அலெர்ட்:
மழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள மலைச்சரிவுகளில், அதிக கனமழையும், தேனீ மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகளில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்!!
அதிகப்படியான மழை பெய்துள்ளதால், “தமிழகத்தின் சிரபுன்ஞ்சி”என்று ஆனது, அவலாஞ்சி. இது ஒரு நீர்ப்பிடிப்பு பகுதி அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், குளிர் தான் அதிகமாக வாட்டுகிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.