Monday, May 6, 2024

15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

Must Read

வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமாக பெய்து வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர் மழை:

கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தற்போது அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கூறப்பட்டதாவது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகாசி, மதுரை, தேனி, விருதுநகர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் நாளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 18 செ.மீ, காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில பகுதிகளில் 16 செ.மீ, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் 12 செ.மீ, கடலூர் மாவட்டத்தில் உள்ள வானமாதேவி பகுதியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி பகுதி மற்றும் செங்கல்பட்டில் உள்ள மஹாபலிபுரம் பகுதியில் 10 செ.மீ, திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், புவனகிரி பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் பழைய கட்டிடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -