வளிமண்டல சுழற்சி காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழை:
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. தலைநகர் சென்னையில் கூட கடந்த சில நாட்களுக்கு முன் 2 மணி நேரத்தில் 7 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
உசிலம்பட்டி, ஒரத்தநாடு பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக சிவகிரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.