மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் அதே இடத்தில நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான கனமழை:
மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் அதே இடத்தில நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது, மஹாபலிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குடவாசல், நன்னிலம் பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக திருவாரூர், திருவள்ளூர் பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நாளை தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று இடையிடையே மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.