நாட்டாமை பட வில்லன் நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

இந்த வருடம் 2020 இல் பல இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். மேலும் திரையுலகில் எதிர்பாராத பல இறப்புகள் பல நிகழ்த்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாட்டாமை பட வில்லன் சௌந்தர் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.

நாட்டாமை பட சௌந்தர்

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம் என்றே சொல்லலாம். கொரோனாவால் வெளியில் வர முடியாமல் தவித்து மேலும் இந்த நோயால் பல உயிரிழப்புகள் என தொடர்ந்து இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் இந்திய திரையுலகில் எதிர்பாராத பல இழப்புகள் நேர்ந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது சுஷாந்த் சிங்,எஸ்பி.பி, வடிவேல் பாலாஜி என பல திறமையான கலைஞர்களை நாம் இழந்துள்ளோம் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது நாட்டாமை படத்தில் வில்லனாக நடித்த சௌந்தர் சிறுநீரக கோளாறு உயிரிழந்துள்ளார். இவர் சரத் குமாரை வைத்து சிம்மராசி என்ற இயங்கியவர். மேலும் இவர் படத்திற்கு வசனம் எழுதுபவரும் கூட.

இதுவரையிலும் 15 படம் வரை வசனம் எழுதியுள்ளார். இதற்கு இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவரின் இறப்பு பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை செர்ட்ந்தவர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். இவரின் சொந்த ஊரான ஈரோடு நாதகவுண்டன் பாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார், சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here