கடல் உணவுகள் என்றாலே அது எப்பொழுதுமே சிறப்பு தான்.மேலும் அதிக சத்துக்களும் நிறைந்தது. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதிலும் இறாலில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன. இறாலை வைத்து தொக்கு எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் – 1 கி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 2
இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2
மஞ்சள்தூள்
சீரகத்தூள்
கரம் மசாலா
மிளகாய்த்தூள்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். அதன் பின் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் சின்னதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது ஓரளவிற்கு வதங்கியதும் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது கழுவி வைத்த இறாலை அதில் சேர்த்து வதக்கவும். இறாலை எப்பொழுதும் 3 நிமிடங்களுக்கு மேல் வேகவைக்க கூடாது. இதனால் இப்பொழுது இதனை மசாலாவுடன் சேரும்படி பிரட்டி வெந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான இறால் தொக்கு தயார்.