தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை:
வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எங்கு எங்கு மழை:
தமிழகத்தில், திருச்சி ,திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனீ, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது மேலும் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கூடுதலாக வானிலை மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 28 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.