14 வது ஐபிஎல் தொடர் – மீண்டும் ஸ்பான்சர் ஆகும் விவோ!!

0

தற்போது இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதத்தில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு மீண்டும் விவோ நிறுவனம் ஸ்பான்சராகி உள்ளது.

ஐபிஎல்:

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். மேலும் இந்த தொடரில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருவார்கள். ஆண்டு தோறும் சிறப்பான முறையில் நடந்து வந்த இந்த தொடர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபில் வைத்து நடந்தது. மேலும் கடந்த ஆண்டு சீன நாட்டிற்கும் இந்தியாவிற்கும் எல்லை பிரச்னை நடந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஸ்பான்ஸரில் இருந்து விவோ நிறுவனத்தை ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக ட்ரீம் 11 நிறுவனம் செயல்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆண்டிற்கான ஸ்பான்சராக விவோ நிறுவனம் மீண்டும் வரும் என்ற தகவல் வெளி வந்த வண்ணமாக இருந்து வந்தது.

வேளாண் சட்டம் எதிர்ப்பு – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்!!

தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் ஐபிஎல் குழு தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் கருத்தை தெரிவித்துள்ளது. அதன்படி நடக்கப்போகும் 14வது ஐபிஎல் தொடர் மூலம் விவோ நிறுவனம் மீண்டும் ஸ்பான்சர் தகுதியை பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளனர். தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை 3 மணி அளவில் தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here