வேளாண் சட்டம் எதிர்ப்பு – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்!!

0

டெல்லியில் சுமார் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டம்:

மத்திய அரசு விதித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 84 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த குடியரசு தின விழாவின் போது பெரிய வன்முறையே வெடித்தது. அதுமட்டுமல்லாமல் இதுவரை அரசு விவசாயிகளுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டவர்கள் பலர் தங்களது ட்விட்டர் மூலமாக தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பல பிரச்சனைகள் கிளம்பியது. தற்போது மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் ஓர் முடிவை எடுத்துள்ளனர். இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். அதன்படி இன்று நண்பகல் முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய அளவில் ரயில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனை விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் – ஆல்ரவுண்டர் புள்ளிப்பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம்!!

மேலும் இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பது படை இயக்குனர் ஜெனரல் அருண் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகள் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்க ஆகிய மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார். மேலும் ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு படையைச் சேர்ந்த 20,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here