அதிமுக பொதுக்குழு வழக்கு – மார்ச் 15ல் சிவில் நீதிமன்றம் விசாரணை!!

0

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மூன்று ஆண்டுக்கு பின்பு தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக:

கடந்த 2017ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கிறகாக சிறை தண்டனை பெற்று சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அன்று சசிகலா விடுதலை பெற்றார். மேலும் கடந்த 8ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வந்தார். தற்போது தமிழகம் வந்த அவர் பழைய வழக்கு ஒன்றை தற்போது மீண்டும் தொடர்ந்துள்ளார். அது என்னவென்றால், கடந்த 2017ம் ஆண்டு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு சொத்துக் குவிப்பு வழக்கிற்காக சசிகலா சிறை சென்றார். அந்நேரத்தில் அதிமுக கட்சி சார்பாக முதலமைச்சர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். மேலும் அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கினார். மேலும் அந்த கூட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பொதுச்செயலாளர் இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றும் கூறினார்.

கிளோஸப்பில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் தற்போதைய நிலையே நீடிக்கப்படும் என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார். இந்த வழக்கு சுமார் மூன்று ஆண்டு காலத்திற்கும் மேலாக நிலுவையில் இருந்தது. தற்போது தமிழகம் திரும்பிய சசிகலா இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தற்போது இந்த வழக்கு வரும் மார்ச் மாதம் 15ம் தேதி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here