புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் – தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம்!!

0

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு

புதுச்சேரி அரசுக்கும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கும் இடையே உருவான மோதல் போக்கு காரணமாக, கிரண் பேடி துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அந்த பதவிக்கு தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த, பாஜகவை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வேளாண் சட்டம் எதிர்ப்பு – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்!!

அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீத் பானர்ஜீ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். முன்னதாக புதுச்சேரி மாநில துணைஆளுநராக இருந்த கிரண் பேடியை அரசு மரியாதையுடன் காவல்துறையினர் வழியனுப்பி வைத்தனர். பதவிப்பிரமானத்தின் போது காரில் வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஆளுநர் மாளிகையின் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் அவரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here