தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. திரை உலகையே தனது சிரிப்பால் ஆட்டிப்படைத்திருந்த வடிவேலு தற்போது வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் விஜய்காந்திடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
வைகைப்புயல் வடிவேலு
திரையுலகில் ஒரு படத்திற்கு ஆக்சன், ரொமான்ஸ் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு காமெடியும் முக்கியமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு காலத்தில் காமெடி நடிகராக இருந்து பல படங்களை ஹிட் அடிக்க செய்தவர் வடிவேலு. தற்போது வரை இவரது காமெடிகள் தான் திரையுலகில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. எந்த மீம்ஸ் என்றாலும் அது வடிவேலு தான் முக்கிய இடத்தை பிடிப்பார். அதிலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – அடுத்த ரவுண்டுக்கு தேர்வான தல அஜித்!!
தொடர்ந்து தனது காமெடி திறமையால் மக்களை தன் வசம் வைத்திருந்தார். இந்நிலையில் போன தடவை நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் காந்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆளே காணாமல் போனார். மேலும் இயக்குனர் சங்கர் தயாரித்த இம்சை அரசன் 2 வில் நடிக்க ஒப்பந்தமாகி பணத்தை எல்லாம் வாங்கி விட்டு கடைசியில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியதால் நடிகர் சங்கத்தில் ரெட் கார்டு போடப்பட்டது. 8 வருடங்களாக நடிக்க வாய்ப்பில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் வடிவேலு. தற்போது முழுவதாக மாறிவிட்ட வடிவேலு விஜய் காந்தை நேரில் சந்தித்து தங்களை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்று வேண்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.