உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி போட்டிக்கு ஏற்கனவே நியூஸிலாந்து அணி முன்னேறியுள்ளது. தற்போது இதனை தொடர்ந்து இந்திய அணியும் பைனலுக்கு முன்னேறியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த ஐசிசி திட்டமிட்டது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் புள்ளிகள் அடிப்படியில் இரு அணிகள் இறுதி போட்டிகளில் மோதுவர் என்றும் அறிவித்தனர். அந்த வகையில் இதன் இறுதி போட்டிக்கு முதல் அணியாக நியூஸிலாந்து அணி முன்னேறியது. மேலும் இதில் பைனலுக்கு முன்னேறும் மற்றொரு அணி யார் என்பது தொடர்ந்து சிக்கலாக இருந்து வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மற்றொரு அணியாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து இதன் முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது.
#INDvsENG நான்காவது டெஸ்டில் மான்ஸ்டராக மாறிய ரிஷாப் பாண்ட் – வைரலாகும் மீம்ஸ்!!
மேலும் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் அடிப்படையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியது. தற்போது நியூஸிலாந்து மற்றும் இந்திய அணி வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோத உள்ளனர்.