திருச்சியில் மார்ச்7இல் திமுக பொதுக்கூட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு!!

0

திருச்சியில் வருகிற 7ம் தேதி அன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கழக உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். இன்று திமுக கட்சியின் கழக செயலாளர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டம் இன்று காலை 9 மணி அளவில் துவங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய நிகல்வுகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, திருச்சியில் வருகிற 7ம் தேதி நன்று பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த கூட்டம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்த கூட்டத்திற்கு கலந்துகொள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுக கட்சி நேர்காணல் தேதி அறிவிப்பு!!

மேலும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள தபால் வாக்குகள் பதிவு செய்யும் முறைகளை கவனமாக கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் துறை முருகன், டி.ஆர். பாலு, கே.என். நேரு பெரியசாமி போன்றவர்கள் கலந்துகொண்டனர். மேலும் வருகிற மார்ச் மாதம் 10ம் தேதி அன்று திமுக கட்சியின் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here