ம.பி முதல்வரான சிவராஜ்சிங் சவுகான், முதல்வரின் விவசாயத்திட்டங்களுக்கு கீழ் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கான பயிற்சித்திட்டம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் ஆட்சி நடத்தி வந்தது. காங்கிரஸ் கட்சியில் அப்பொழுது ஜோதிர் ஆதித்யா சிந்தியா அவர்கள் ஆட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வந்தார். பின்பு அவரது தொண்டர்களால் ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆகையால் பா.ஜ.க மத்திய பிரதேசத்தில் தற்போது வரை ஆட்சி நடத்தி வருகிறது. பா.ஜ.கவில் சிவராஜ்சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மத்திய பிரதேசத்தில் ஆட்சி நடத்த பெரும்பான்மை பா.ஜ.கவிற்கு கிடைத்தது. இந்நிலையில் பா.ஜ.க தொண்டர்களுக்கான பயிற்சி திட்டம் செஹோர் என்னுமிடத்தில் நடைபெற்றது. அதில் பா.ஜ.கவில் முதல்வர் பதவி ஏற்ற சிவராஜ்சிங் சவுகான் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கல்
செஹோர் என்னுமிடத்தில் தொண்டர்களுக்கான நடைபெற்ற பயிற்சி திட்டத்தில் பா.ஜ.க முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்துக்கொண்டார். அந்த பயிற்சி திட்ட கூட்டத்தில் சிவராஜ்சிங் சவுகான் மக்களுக்கு சேவை செய்யும் பணி தொடர்ந்து செய்துகொண்டே தான் இருப்போம் என்றும் கூறினார். மேலும் பா.ஜ.கவிற்கு பல நலத்திட்டங்கள் செய்வதற்கு பெரும்பான்மை கிடைத்து உள்ளது.
அதில் ஒன்றாக முதல்வரின் விவசாயத்திட்டங்களுக்கு கீழ் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று விவசாய மக்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவித்துள்ளார்.