கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் அருகே மாடு ஒன்று பைக்கின் குறுக்கே பாய்ந்தால் பொறியியல் படிப்பை படித்துள்ள அபிசோன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
பொறியியல் மாணவன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அபிசோன். 23 வயதான இவர் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை ஒன்றை சுயமாக நடத்தி வருகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
எப்பொழுதும் திருவட்டாரிலிருந்து அழகியமண்டபத்திற்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கமாக தனது கடைக்கு சென்ற இவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
நேற்று மாலை நேரம் திருவட்டாரிலிருந்து அழகியமண்டபத்தில் உள்ள அவரது கடைக்கு பைக்கில் சென்றுள்ளார். மாடு ஒன்று பைக்கின் குறுக்கே பாய்ந்ததால் பைக் ஆலமரத்தில் மோதியது. இதனால் பைக்கிலிருந்து அபிசோன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்துக்குள்ளான அபிசோன் சிகிச்சை பலனின்றி சிறுது நேரத்திலேயே உயிரிழந்தார். பின்பு திருவட்டார் போலீஸ் விபத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விபத்து நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.