கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிர்ச்சி தரும் விதமாக அதிகரித்துள்ளது.
ஏற்ற இறக்கங்களுடன் விலை நிலவரம்:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. அதிகபட்சமாக, சவரனுக்கு 43,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்தது.
இந்த வாரம் தங்கத்தின் விலை நிலவரம் குறைந்து வந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். நேற்று மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 114 ரூபாய் குறைந்தது. இதே போல் தங்கத்தின் விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 576 ரூபாய் உயர்ந்து சவரன் 39,800 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமுக்கு 72 ரூபாய் உயர்ந்து 4,975 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2.70 காசுகள் உயர்ந்து 72.50 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரத்தால் மக்கள் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். படிப்படியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது, விசேஷங்களுக்காக தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களை பீதியடைய வைத்துள்ளது.