தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 உள்ளிட்ட 7 தேர்வுகளுக்கு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு தேர்வாணையம் அதிகாரி சுதன் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார்.
பல தேர்வுகள்:
கடந்த 2019 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 உட்பட பல தேர்வுகளை நடத்தியது. அதில் தற்போது 7 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் பங்கேற்றவர்கள் முடிவுகளை ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தி உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
கூடுதலாக இந்த தேர்வுகளுக்கான நேர்முக தேர்வு வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
என்னென்ன தேர்வுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எந்தெந்த தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அது,
- குரூப் 2 நேர்காணல் உள்ள பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி நடந்த தேர்வு. இந்த பதவிகளுக்கு 1334 காலிப்பணியிடங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- தமிழக தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பதவிக்கு உள்ள 60 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
- கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் உதவியாளர் பணிக்கு 19 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- பள்ளி கல்வித்துறையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ பதவிக்கு இருந்த 20 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான நலன் சார்ந்த நிறுவனத்தில் உள்ள திட்ட அலுவலர் பதவி மற்றும் சிறைப்பணி உதவியாளர் தேர்வு முடிவுகள்.
- தொழில் துறை அலுவலர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள்.
இந்த தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வினை எழுதியவர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முடிவுகளை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.