Wednesday, April 24, 2024

‘கொரோனா குமார்’ – குழந்தைகளுக்கு வினோத பெயர் சூட்டிய தம்பதி!!

Must Read

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவை நினைவு கூறும் வகையில் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னால் கொரோனா என்று அடைமொழி வைப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கொரோனா வைரஸ்:

கொரோனா என்ற பெரும் தொற்று கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தியது. இந்த பொது முடக்கம் தற்போது பல தளர்வுகளுடன் 8வது கட்டமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

குரூப் 2 உட்பட 7 தேர்வுகளுக்கான “ரிசல்ட்” – TNPSC அறிவிப்பு!!

இந்த வைரஸ் பரவியதால் பல பாதிப்புகள் இருந்தாலும் ஒரு நன்மையையும் உள்ளது. அனைத்து மக்களுக்கு தற்போது சுத்தம் மிகவும் முக்கியம் என்று உணர்ந்து கொண்டனர். சுகாதாரத்தையும் பேணி பாதுகாத்து வருகின்றனர். இப்படி இந்த வைரஸ் மக்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்ததை அடுத்து வடமாநில மக்கள் ஒரு படி மேலே போய் தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா என்று அடைமொழியோடு பெயரை சூட்டி மகிழ்கின்றனர்.

அடைமொழி கொண்ட பெயர்கள்:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் பேருந்தில் பயணிக்கும் போது பிரசவ வலி வந்து துடித்துள்ளார். அவரை பேருந்தில் உள்ள பயணிகள், ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் என்று அனைவரும் அவரை ஆறுதல் படுத்தி மருத்துவமனைக்கு அளித்து செல்ல விரைந்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லுவதற்குள் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

baby names
baby names

இதனை அடுத்து அந்த பெண் தன் குழந்தைக்கு “கொரோனா” குமார் என்று பெயர் சூட்டி உள்ளார். இதே போல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தன் பெண் குழந்தைக்கு “சானிடைசர்” குமாரி என்று பெயர் வைத்துள்ளனர். இன்னொரு தம்பதியர் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு “கொரோனா” மற்றும் “கோவிட்” என்று பெயர் வைத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -