தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். 2023 ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதற்கு பதிலளித்த சீமான், “காலை உணவுக்கு வழியில்லாமல் ரூ.500 க்கும் ரூ.1,000க்கும் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளியதே இந்த தி.மு.க. அரசு தான். 80 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறி வரும் தி.மு.க.வே, நீங்கள் நிறைவேற்றிய வாக்குறுதி 8 சதவீதம் மட்டும் காட்டுங்க பார்ப்போம்.” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.