பார்வையற்றோர் விளையாட்டு சம்மேளனம் (IBSA) சார்பாக உலக அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த தொடரில், பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் அணி இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து, சேஸிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 3.3 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால், DLS முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், முதல் தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பாக இந்திய அணிக்கு 10 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலக கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?? வெளியான நியூ அப்டேட்!!