தற்போதைய காலகட்டத்தில் நூதன முறையில் பல மோசடிகள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் திடுக்கிடும் மோசடி நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி வழியாக கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை கிட்டத்தட்ட 1.17 கோடி வாகனங்கள் கடந்து சென்றுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் கடந்து சென்று 1.17 கோடி வாகனங்களில் சுமார் 62.37 லட்சம் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அதே போல் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த 89 லட்சம் வாகனங்களில் சுமார் 32 லட்சம் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க படாமல் இருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை.., சீன அரசு அதிரடி!!