இந்த வாரம் பிக் பாஸ் 4 சீஸனில் இருந்து யார் வெளியேற்றபடுவார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்த ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற இருக்கிறார்.
பிக் பாஸ்:
பிரபல தொலைகாட்சியசான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் “பிக் பாஸ்” இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக மிக தாமதமாக தான் ஆரம்பித்தது. இப்படி இருக்க இந்த பிக் பாஸ் சீசனில் சண்டைகள் மட்டுமே நிறைந்துள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
50 நாட்கள் முடிந்துள்ள நிலையில் மொத்தம் 15 போட்டியாளர்களில் 4 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டு உள்ளனர். ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா தற்போது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் வீட்டில் சண்டைகள் மட்டுமே இருந்தது. சிறு சிறு விஷயங்களுக்கு கூட போட்டியாளர்கள் சண்டையிட்டு கொண்டனர். இதனால் ரசிகர்கள் போட்டியாளர்கள் பலர் மீதும் அதிருப்தியில் உள்ளனர்.
யார் வெளியேற்றப்படுவார்:
இப்படியாக இருக்க இந்த வாரம் எலிமினேட் ஆவதற்காக தேர்தெடுக்கப்பட்டவர்கள் ஆரி, பாலாஜி, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா மற்றும் சம்யுக்தா. இவர்களில் நேற்று நடந்த எபிசோடில் நடிகர் கமல் ஹாசன் ஆரி மற்றும் பாலாஜியினை காப்பாற்றினார்.
இதனால் இவர்களை தவிர்த்து தற்போது சனம், நிஷா, சோம், சம்யுக்தா மற்றும் ரமேஷ் ஆகியோர் உள்ளனர். இவர்களில் சம்யுக்தா தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
அரைகுறை ஆடையுடன் நடனமாடிய “ரோஜா” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!
காரணம், இவர் ஆரம்பத்தில் இருந்தே ஆரியை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. அதே போல் கடந்த வாரம் முழுவதுமே அவர் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அவர் “வளர்ப்பு” என்ற வார்த்தையினை அதிகமாக பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை காயப்படுத்தி உள்ளார். அதனால், இந்த வாரம் அவர் தான் வெளியேற்றப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளது. அவர் கடந்த வாரம் முழுக்க பேசியதற்காக அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர்.