ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மிக பிரம்மண்டமாக நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் பக்தர்களின்றி நடைபெற்றது. முருகபெருமான் சூரனை வதம் செய்தார்.
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டதின் உள்ள திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள கடற்கரையில் மிக பிரமாண்ட முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் மிக கோபத்துடன் அசுரனை வதம் செய்வார் இதை காண்பதற்காக மக்கள் திரண்டு எங்கிருந்தோ இருந்து வருவார்கள்.
கொரோனா காரணமாக கூட்டத்தை தடுப்பதற்காக இந்த ஆண்டு சூரசம்ஹாரம் பக்தர்களின்றி நடைபெற்று வந்தது. இதுவே பக்தர்கள் இல்லாமல் நடந்த முதல் சூரசம்ஹாரம். மக்கள் வராமல் இருப்பதற்காக 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர்.
சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழா கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பின்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு பூஜை நடைபெற்று வரும். நேற்று மகா தீபாராதனை உள் பிரகாரத்தில் நடைபெற்றது. பின்பு முருகப்பெருமான் மற்றும் அம்மாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தினந்தோறும் நடைபெற்று வரும் தங்கதேர் வீதி உலா கொரோனா காரணமாக நடைபெறவில்லை.
6ஆம் நாள் திருவிழாவான இன்று சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமான் முதலில் சிங்கமுகனை வதம் செய்வார், பின்பு தாரகாசுரனையும் இறுதியாக சூரபத்மனை வதம் செய்வார். இந்த சுரசம்ஹாரம் காலம் காலமாக திருச்செந்தூரில் நடைபெற்று வரும்.