தற்போது நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளதால் ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போகவுள்ளன. இந்நிலையில் மே 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் போட்டிகள் நடக்குமா..?
கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டித்து விட்டார்.
மத்த டீம் லா வேஸ்ட் CSK தான் பெஸ்ட் – தோனி குறித்து வாட்சன் நெகிழ்ச்சி..!
ஐபிஎல் நடப்பதில் சிரமம்..!
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடாமல் உள்ளது.
இனிமே இவர்தான் இந்தியாவின் விக்கெட் கீப்பர்.. தோனியை எப்படி எடுப்பீங்க..? கௌதம் கம்பீர் அதிரடி..!
மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சிரமம் ஆகவே போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து வாரிய உறுப்பினர்கள் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை நடத்திய பின்னரே அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |