ஐபிஎல் நடக்காமல் போனால் தோனியை இனி எந்த வகையில் அணியில் தேர்வு செய்ய முடியும் என்றும் அதிரடியாக கூறி உள்ளார். இந்த நிலையில், தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் எந்த வீரர் இருப்பார் என கணித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் தோனி..!
தோனி கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அவர் தன்னை 2020 ஐபிஎல் தொடரில் நிரூபிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்த டீம் லா வேஸ்ட் CSK தான் பெஸ்ட் – தோனி குறித்து வாட்சன் நெகிழ்ச்சி..!
தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடர் நடக்கவே வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
தோனி அணிக்கு திரும்புவது கடினம்..!
ஐபிஎல் நடக்காவிட்டால் தோனி மீண்டும் அணிக்கு வருவது கடினம். கடந்த ஒன்றரை வருடமாக அவர் ஆடாத நிலையில், எந்த அடிப்படையில் அவரை அணியில் தேர்வு செய்வீர்கள் தோனியின் வாய்ப்பு குறைவாக உள்ளது.
எங்க தலைவன கடைசியில் புல்லு வெட்ட வச்சுட்டீங்களேடா – புலம்பும் தோனி ரசிகர்கள்..!
இப்போது இந்திய அணியில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ யாரால் போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுக்க முடியுமோ அவர் இந்திய அணிக்காக ஆட வேண்டும் எனவும் கூறி தோனிக்கு அடுத்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என கூறினார் கம்பீர்.
ராகுல் சிறந்த வீரர்..!
தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் சொதப்பலாக ஆடி வந்தார்.பின்னர் ஆஸ்திரியாவுக்கு எதிராக ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். அப்போது முதல் ராகுல் மிக சிறப்பாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
தோனிக்கு சிறந்த மாற்று வீரராக கேஎல் ராகுல் தான் இருப்பார். அவர் விக்கெட் கீப்பிங் செய்ய ஆரம்பித்ததில் இருந்து அவரது செயல்பாட்டை கண்டு வருகிறேன். அவரது கீப்பிங் தோனி அளவுக்கு இல்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் சிறந்த வீரராக இருக்கிறார் என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |