ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

0

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை வழங்கி உள்ளது.

யார் யாருக்கு விலக்கு..?

நான்கு விதமான பிரிவுகளில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,

பிரிவு 1: கரோனா பாதிப்பு ஐந்துக்கும் குறைவாக அல்லது அதன் தொற்று கடந்த 7 நாள்களாக புதிதாக கண்டறியப்படாத மாநிலங்களில் அனைத்து தடைகளையும் விலக்கி கொள்ளலாம்.

பிரிவு 2: மாநிலங்கள்/மாவட்டங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு கரோனா பாதிப்பு ஒன்றாக இருக்கும் நிலையில், அங்கு அனைத்து போக்குவரத்து சேவைகளையும் தொடங்கலாம். ஆனால், பிரிவு 3 மற்றும் பிரிவு 4 மாநிலங்களுடனான எல்லைக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.

பிரிவு 3: மாநிலங்கள்/மாவட்டங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு கரோனா பாதிப்பு 1-2 இருக்கும்பட்சத்தில் ஊரடங்கை தொடர வேண்டும். ஆனால் சில அத்தியாவசிய சேவைகளில் கட்டுப்பாடுகளை தளா்த்தலாம். ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடரலாம். ஆனால், அது அந்த மாநிலத்துக்குள்ளாக மட்டுமே இருக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள், கல்வி மற்றும் இதர சேவைகளுக்கான தடையை தொடரலாம்.

பிரிவு 4: மாநிலங்கள்/மாவட்டங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு கரோனா பாதிப்பு இரண்டு அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அங்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி தொடா்ந்து காண்காணிக்க வேண்டும்.

சுங்க வரி, சுகாதார தீா்வை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் செயற்கை சுவாசக் கருவி, முகக் கவசம், தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், கரோனா கண்டறியும் கருவிகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here