ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

0

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு..!

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் மெஷின் மூலம் அரிசி விநியோகம் செய்து அசத்தும் நாடு..! எங்கு தெரியுமா..?

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபடுத்திள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

போலீசார் வழக்குப்பதிவு..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,87,623 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

தமிழகத்தில் ரயில் சேவைகள் தொடங்கப்படுமா..? அதிகாரிகள் விளக்கம்..!

மேலும் 1,48,342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.76,96,544 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here