உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வியட்நாம் அரசு உதவ புது முயற்சியை கையில் எடுத்து உள்ளது.
ஏடிஎம் மூலம் அரிசி:
வியட்நாம் நாட்டில் இதுவரை 265 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது குறைவு தான் என்பதால் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து உள்ளது. அதன்படி ஏடிஎம் மூலம் மக்களுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
காலை 8 மணி முதல் மாலை 5 ஐந்து மணிவரை இந்த ஏடிஎம் இயந்திரத்தில் அரசி கிடைக்கும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த துணிப்பைகளில் 6 அடி இடைவேளை விட்டு நின்றுகொண்டு அரிசி பெற்றுச் செல்லலாம். இவர்கள் ஹேண்ட் சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அரிசியை ஏடிஎம்மில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு 2 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |