வெளிய போன என்ன புடுச்சுட்டு போயிடுவாங்க – சிறுவனின் வைரல் வீடியோ.!

0

கொரோனாவால் ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்றோடு முடிவடைய இருந்த ஊரடங்கு தற்போது மே 3 வரை நீடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் வெளியில் சென்றால் அரசு என்னை பிடித்துக்கொண்டு சென்று விடும் என சிறுவன் ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ

சிறுவன் ஒருவன் மிக தெளிவாக ஊரடங்கு குறித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தாய் ஒருவர் தனது மகனிடம் வெளியில் செல்வோமா என கேட்க அதற்கு அந்த சிறுவன் வேண்டாம் என்று கேட்க நான் தயாராகவில்லை என சொல்கிறான். ஏன் என தாய் கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன். “இது ஊரடங்கு காலம். இப்பொழுது வீட்டை விட்டு வெளியே போககூடாது என மோடி அங்கிள் சொல்லியுள்ளார். ” என பதில் சொன்னான். அதற்கு அந்த தாய் பரவாயில்லை போகலாம் என கூறும் போது அதற்கு அந்த சிறுவன் “அரசு என்னை தூக்கி கொண்டு போய்விடும். மோடி அங்கிள் என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என சொல்லியிருக்கிறார்” என அப்பாவி தனமாக சொல்லுகிறான்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here