கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் நேரத்தில், மேலும் 15 நாட்கள் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி. இதனால், மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர் .கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக நடிகர் விஜய்க்கு தகவல் கிடைத்தது.
தனியாக தவிக்கும் விஜய் மகன்
தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்துவருகிறார்.கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கியுள்ளன. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மிக பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனார். பல நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தனது மகன் கனடாவில் இருப்பதால் நடிகர் விஜய் மிகுந்த கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் கனடாவில் கொரோனா தாக்கம் குறைவு என்ற தகவலும் சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவலும் விஜய்க்கு சற்று நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது.குடும்பத்தினர் கவலை ஆனாலும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மகன் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பது விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் வருத்தத்தையும் கவலையையும் கொடுத்துள்ளதாம். இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த 21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் & வாய் திறக்காத விஜய்
மாநகரம்,கைதி போன்ற வெற்றி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்பொழுது நடிகர் விஜய் வைத்து படம் எடுத்தார்.விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா விவகாரம் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முருகதாஸ்க்கு வாய்ப்பு அளித்துள்ளதாக விஜயின் 65வது படத்தை இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக வாய் திறக்கவில்லை விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளும் நிதி அளித்து வரும் நிலையில் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பேச்சாக இருந்து வருகிறாது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |