நாட்டு மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உரை..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மே 3ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார்.
ட்வீட்டர் புகைப்படத்தை மாற்றிய பிரதமர்..!
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்க புகைப்படத்தை மாற்றியுள்ளார். அதில் அவர் முகக்கவசம் அணிந்த நிலையில் தனது புகைப்படத்தை வைத்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |