தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வியாண்டு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
TNPSC குரூப் 4 முக்கிய வினா.., இன்று திங்கள் கிழமை, 61 நாள் கழித்து என்ன கிழமை வரும்?? விடை உள்ளே!!
இந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு 100 டிகிரி செல்சியஸை தாண்டி கோடை வெயில் அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் தொடங்கும் தேதியில் மாற்றம் ஏற்படவும் அதிக வாய்ப்பு இருக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.